ஈரோடு, பிப். 18: ஈரோடு மூலப்பாளையத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் மத்திய பட்ஜெட்டை கண்டித்து நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு தாலுகா கமிட்டி உறுப்பினர் பழனிசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் மாரிமுத்து, தாலுகா செயலாளர் நாச்சிமுத்து, மூலப்பாளையம் கிளை செயலாளர் குப்புசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு பேசினர். இதில், வங்கிகள், எல்.ஐ.சி., ஏர் இந்தியா, எண்ணெய் நிறுவனங்கள் போன்ற பொதுத்துறை நிறுவனங்கள், ரயில்வே உள்ளிட்ட அரசு நிறுவனங்களையும் தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை கைவிட வேண்டும்.