ஈரோடு, பிப். 18: ஈரோடு மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்த குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் தமிழக மக்கள் முன்னேற்ற கட்சியின் சார்பில் மாவட்ட தலைவர் செல்வராஜ் தலைமையில் கோரிக்கைகள் தொடர்பாக மனு அளிக்கப்பட்டது. அந்த மனுவில் தெரிவித்துள்ளதாவது, குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியார் என்ற 7 உட்பிரிவுகளை ஒன்றிணைத்து தேவேந்திர குலவேளாளர் என்று அரசாணை வெளியிட வேண்டும். இதை வலியுறுத்தி பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். தமிழக அரசு இந்த கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று பல்வேறு விதமான போராட்டங்களை நடத்தி அரசுக்கு தெரியப்படுத்தி வருகிறோம். ஆனால் அரசு ஆய்வுக்குழு மட்டும் அமைத்து விட்டு எந்தவிதமான நடவடிக்கையும் எடுக்காமல் அமைதியாகி விட்டது.