9 கிளப்களுக்கு சீல் வைப்பு

ஈரோடு, பிப். 18: ஈரோடு மாவட்ட எஸ்.பி.சக்திகணேசன் கூறியுள்ளதாவது: ஈரோடு மாவட்டத்தில்  இயங்கி வந்த மனமகிழ் மன்றங்களில் சட்ட விரோத செயல்கள் நடைபெறுவதாக புகார்கள் வந்தது. இதை தொடர்ந்து சட்டவிரோத செயல்கள் நடைபெறாமல் இருக்க 9 கிளப்களுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு ஓட்டல் கிளப்மேலாஞ்சில் உள்ள 2 அறைகள், சிட்டி ரெக்கரியேசன் கிளப், சோலார் கொங்கு ரெக்கரியேசன் கிளப், மொடக்குறிச்சி தமிழன் ரெக்கரியேசன் கிளப், நெருஞ்சிபேட்டை சாய் ரெக்கரியேசன் கிளப், பவானி லட்சுமிநகர் பவானி கூடல் ரெக்கரியேசன் கிளப், சித்தோடு காலிங்கராயன் ரெக்கரியேசன் கிளப், பெருந்துறை ஸ்ரீமகாலட்சுமி ரெக்கரியேசன் கிளப், சிவகிரி கொங்கு தீரன் ரெக்கரியேசன் கிளப் ஆகிய கிளப்களுக்கு 17ம்தேதி முதல் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

Related Stories: