×

திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தில் பொலிவுபெறும் தேளிகுளம்

திருத்துறைப்பூண்டி, பிப்.18: திருவாருர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகராட்சியில் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் நகரை தூய்மையான நகராக்கவும், அழகுபடுத்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருக்கிறது. நகரின் பிரதான பகுதியான தேளிகுளம் பகுதியில் கரைகளை தூய்மைபடுத்தி கம்பிவேலி அமைத்து பூச்செடிகள் வைக்கப்பட்டுள்ளது. அபிஷேக கட்டளை பகுதியில் குப்பைகள் கொட்டப்பட்டு வந்த பகுதி சுத்தம் செய்து சிங்கப்பூர் வாழ் தமிழர் வெற்றிவேலன் நிதி உதவியுடன் சிறுவர்கள் விளையாடும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.இதேபோல் நகரின் நீர்நிலைகள் பராமரிப்பு, பூங்காக்கள் அமைக்கவும் பொது நலனில் அக்கரை கொண்டவர்கள் தங்களை நகரின் தூய்மையாக வைக்கவும், மேம்படுத்தவும் தங்களை ஈடுத்திக் கொள்ள முன்வர வேண்டும் என்று நகராட்சி ஆணையர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.


Tags :
× RELATED முத்துப்பேட்டை புதுத்தெரு அரசு பள்ளியில் உலக புத்தக தின விழா கொண்டாட்டம்