×

குமுறும் நோயாளிகள்உதயமார்த்தாண்டபுரத்தில் வெறிநாய் கடித்து 20 ஆடுகள் பலி

முத்துப்பேட்டை, பிப்.18: உதயமார்த்தாண்டபுரத்தில் வெறிநாய் கடித்ததில் 3 பேர் படுகாயம் அடைந்தனர்.திருவாரூர் மாவட்டம், முத்துப்பேட்டை அடுத்த உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட உதயமார்த்தாண்டபுரம் தெற்குதெரு, கீழக்காடு, நாச்சிக்குளம், காலனிதெரு, காலவேண்டிகுளம், வடக்கு பள்ளியமேடு, ஏரிக்கரை ஆகிய பகுதிகளில் சமீபகாலமாக நாய்கள் தொல்லை நாளுக்கு நாள் அதிகரித்துள்ளது. இதனால் ஏராளமான நாய்கள் கடைத்தெரு மற்றும் குடியிருப்புகளின் தெருக்களில் கூட்டம் கூட்டமாக பொதுமக்களையும், குழந்தைகளையும் விரட்டி அச்சுறுத்தி வருகிறது. வாகனங்களில் செல்பவர்களை துரத்தி சென்று ஓட்டுபவர்களின் கவனத்தை திசை திருப்புவதால் அவ்வப்போது விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. அதேபோல் அடிக்கடி டூவீலர்களில் செல்பவர்களை குறுக்கே வரும் நாய்கள் மீது மோதி விபத்துக்குள்ளாகின்றனர். மேலும் சில நாய்களுக்கு வெறி பிடித்துள்ளதால் ஏராளமான மாடுகள், ஆடுகளை கடித்து குதறி சாகடித்து வருகிறது. இதில் தெற்குதெரு, கீழக்காடு, நாச்சிக்குளம், காலனிதெரு, காலவேண்டிகுளம், வடக்கு பள்ளியமேடு ஆகிய பகுதியை சேர்ந்த விஜய நிர்மலா, லதா, தனலட்சுமி, ஜானகி, சுரேகா, தேவிகா, முத்துக்கண்ணு, மற்றொரு லதா, ஜோதி, அபிராமி ஆகியோரின் 20க்கும் மேற்பட்ட ஆடுகளை கடித்து குதறி சாகடித்தது.

இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பள்ளிக்கு சென்று வீடு திரும்பிய அசோகன் என்பவரது குழந்தைகள் பிரதநிதா(6), அபிமன்யு(5) மற்றும் பஞ்சநாதன் மனைவி லதா(35) ஆகியோரையும் துரத்தி கடித்தது. இதனால் அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதுகுறித்து பொதுமக்கள் பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடன் புகார் தெரிவித்தும், எந்த பயனும் இல்லை. இதனால் உதயமார்த்தாண்டபுரம் ஊராட்சி மக்கள் பெரிதும் அவதிக்குள்ளாகி வருகிறார்கள். இப்படி தொடர்ச்சியாக மக்களை அச்சுறுத்தி வரும் நாய்களை புதியதாக பொறுப்பேற்றுள்ள ஒன்றியம் மற்றும் ஊராட்சி நிர்வாகம் இனியும் காலதாமதம் ஏற்படுத்தாமல் பிடித்து அப்புறப்படுத்த வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.இதுகுறித்து மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலாளர் பாலசுப்பிரமணியன் கூறுகையில்: சமீபகாலமாக உதயமார்டாண்டபுரம் ஊராட்சி பகுதியில் நாய்கள் தொல்லை அதிகரித்து உள்ளது. சில தினங்களுக்கு முன் இரண்டு பள்ளி குழந்தைகள், ஒரு பெணை வெறிநாய் கடித்து குதறியது. 20 க்கும் மேற்பட்ட ஆடுகளை நாய் கடித்து குதறி சாகடித்துள்ளது. ஆகவே இனியும் அலச்சியப்படுத்தாமல் நாய்களை அப்புறப்படுத்தாவிட்டால் விரைவில் போராட்டத்தில் ஈடுபடுவோம் என்றார்.

Tags : rabies patients ,
× RELATED ஆதிச்சமங்களம் ஊராட்சியில் புதிய மின்மாற்றி அமைப்பு