×

திருவண்ணாமலையில் நாளை மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், குழு விளையாட்டு போட்டி கலெக்டர் தகவல்

திருவண்ணாமலை, பிப்.18: திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான மாற்றுத்திறனாளிகளுக்கான தடகளம், குழு விளையாட்டு போட்டிகள் நாளை நடைபெற உள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.திருவண்ணாமலை கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி விடுத்துள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது: திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கத்தில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், திருவண்ணாமலை பிரிவு சார்பாக நாளை(புதன்) மாற்றுத்திறனாளிகளுக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டிகள் நடத்தப்படுகிறது.இதில் கலந்து கொள்பவர்கள் இன்று(செவ்வாய்) மாலை 4.30க்குள் தங்கள் நுழைவு படிவத்தினை சமர்ப்பிக்க வேண்டும். இப்போட்டிகள் நாளை காலை 9 மணி அளவில் ஆண்கள் மற்றும் பெண்கள் ஆகிய இருபாலருக்கும் வயது வரம்பின்றி நடக்கிறது.

இதில், மாற்றுத்திறனாளிகள், கண்பார்வையற்றோர், மனவளர்ச்சி குன்றியோர், காது கேளாதோர் ஆகியவர்களை ஊக்குவித்திடும் பொருட்விளையாட்டு போட்டிகள் நடைபெற உள்ளது. போட்டிகளில் வெற்றி பெறுபவர்களுக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ் வழங்கப்படும்.குறிப்பிட்ட பிரிவில் விளையாட கலந்து கொள்பவர்கள் ஒருவர் ஒரு விளையாட்டில் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும். போட்டிகளில் கலந்து கொள்பவர்கள் அவர்கள் குறிப்பிட்ட பிரிவில் விளையாடுவதற்கு அக்குறிப்பிட்ட பிரிவைச் சார்ந்தவரா என உறுதி செய்வதற்காக அரசு வழங்கிய அசல் அடையாள அட்டை மற்றும் நகல் அவசியம் கொண்டு வருதல் வேண்டும்.மேலும், கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நல அலுவலர் நான்சியை 04175 233169 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

Tags : Group Sports Competition ,
× RELATED புதுகை மாவட்ட அளவில் மாற்றுத்திறனாளிகளுக்கான குழு விளையாட்டு போட்டி