×

கலசபாக்கம் அருகே பரபரப்பு டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகை

கலசபாக்கம், பிப்.18: கலசபாக்கம் அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பெண்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.லசபாக்கம் அடுத்த காஞ்சி கிராமத்தில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையால் பொதுமக்கள் பெரும்சிரமத்துக்கு ஆளாகி வருகிறார்கள். ெபாதுமக்கள் நடமாட்டம் உள்ள இப்பகுதியில் இயங்கி வரும் டாஸ்மாக் கடையை அகற்ற வேண்டும் என இப்பகுதி மக்கள் அதிகாரிகளுக்கு பல முறை கோரிக்கை வைத்தனர். ஆனால், இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.இதனால், ஆத்திரம் அடைந்த அப்பகுதி பெண்கள் 50க்கும் மேற்பட்டோர் டாஸ்மாக் கடையை அகற்ற கோரி நேற்று கடையை முற்றுகையிட்டனர். தகவல் அறிந்த கடலாடி போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆதிலட்சுமி மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது டாஸ்மாக் கடையை அகற்ற உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். அதன்பேரில் பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags : Siege ,women ,Task Shop ,Kalasakkam ,
× RELATED கஞ்சா கடத்திய 2 பெண்கள் கைது