×

செய்யாறில் பரபரப்புதனியார் பஸ் டயர் கழன்று ஓடியது

செய்யாறு, பிப்.18: செய்யாறில் தனியார் பஸ் டயர் திடீரென கழன்று ஓடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இதில் பயணிகள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினர்.ஆரணியில் இருந்து செய்யாறுக்கு தனியார் பஸ் ஒன்று பள்ளி மாணவ, மாணவிகள் உட்பட 70க்கும் மேற்பட்ட பயணிகளுடன் நேற்று காலை 9.45 மணிக்கு வந்தது. செய்யாறு பஸ் நிலையத்திற்குள் சென்றபோது பஸ் திடீரென கட்டுப்பாட்டை இழந்தது. இதனால் டிரைவர் பஸ்சை மெதுவாக இயக்கினார்.அப்போது முன்பக்கம் வலதுபுறம் இருந்த டயர் கழன்று சாலையில் உருண்டு ஓடியது. இதனால், அதிர்ச்சியடைந்த பயணிகள் அலறி கூச்சலிட்டனர். இதையடுத்து பஸ்சை பாதுகாப்பாக டிரைவர் நிறுத்தினார். இதனால் பயணிகள் சிறு காயமும் இன்றி அதிர்ஷ்டவசமாக தப்பினர்.

Tags : Cheyyar ,
× RELATED இந்து அறநிலையத்துறைக்கு சொந்தமான...