பள்ளிகொண்டா, பிப்.18: பள்ளிகொண்டாவில் கர்ப்பமான நிலையில சுற்றித்திரியும் மனநலம் பாதித்த பெண்ணை காப்பகத்தில் சேர்க்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வேலூர் மாவட்டத்தில் ஏராளமான மனநலம் பாதிக்கபட்டோர் சாலைகள், கோயில்கள் மற்றும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் சுற்றி திரிகின்றனர். அதுபோல், பள்ளிகொண்டாவில் ஒரு மாதமாக கர்ப்பமாக இருக்கும் மனநலம் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் குடியாத்தம் சாலைகளிலும், கோயில்கள் உள்ள பகுதிகளில் சுற்றி வருகிறார்.இவரைபோல், பள்ளிகொண்டாவில் மனநலம் பாதிக்கப்பட்டு வீடுகளில் தங்காமல் சுற்றுப்புற பகுதிகளில் சுற்றி வருகின்றனர். மேலும், பள்ளிகொண்டா- குடியாத்தம் சாலையில் தினந்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகிறது. இதில் மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் அடிக்கடி வாகனங்களில் சிக்கி காயமடைகின்றனர்.