பள்ளிகொண்டா, பிப்.18: பள்ளிகொண்டாவில் காவல் நிலையம் அருகே போக்குவரத்துக்கு இடையுறாக நிறுத்தபட்டுள்ள வாகனங்களால் வாகன ஓட்டிகள், பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா காவல் நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் விபத்துகள் குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களின் வாகனங்களை பறிமுதல் செய்து சர்வீஸ் சாலையிலியே நிறுத்தி வைக்கின்றனர். இரண்டு வாகனங்கள் செல்ல கூடிய சாலையில் ஒன்றன் பின் ஒன்றாக செல்கிறது. இதனால் அடிக்கடி சர்வீஸ் சாலையில் போக்குவரத்து பாதிப்பு ஏற்படுகிறது.இதுதவிர சாலையிலியே அதிகளவில் மணல்கள் சேர்ந்துள்ளதால் இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் அடிக்கடி விபத்துகளில் சிக்கி கொள்கின்றனர். எனவே, இங்கு நிறுத்தி வைக்கப்பட்டுள்ள வாகனங்களை அரசு இடத்தை தேர்வு செய்து போக்குவரத்துக்கு இடையூறு இல்லாதபடி நிறுத்தி வைக்க வேண்டும் என பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை வைத்துள்ளனர்.