×

வேலை கொடுக்காமல் அலைக்கழித்ததால் மேஸ்திரியை கொலை ெசய்தேன் கைதான கட்டிட தொழிலாளி பரபரப்பு வாக்குமூலம்

வேலூர், பிப்.18: வேலூரில் மேஸ்திரியை ஓட, ஓட விரட்டி கொலை செய்த கட்டிட தொழிலாளியை போலீசார் கைது செய்துள்ளனர்.வேலூர் சலவன்பேட்டை திருப்பூர் குமரன் 2வது தெருவைச் சேர்ந்தவர் குட்டி என்கிற முருகவேல்(46), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி சரளாதேவி. முருகவேலிடம், அதேபகுதியை சேர்ந்த விஜிகுமார்(45), அவரது மனைவி செல்வி(36) இருவரும் வேலை செய்து வந்துள்ளனர்.இந்நிலையில் கட்டிட மேஸ்திரி முருகவேல் விஜிகுமாரின் மனைவி செல்விக்கு மட்டும் தொடர்ந்து வேலை கொடுத்து வந்தாராம். தனக்கு வேலை கொடுக்காமல் தனது மனைவிக்கு மட்டும் வேலை கொடுப்பது குறித்து விஜிகுமார், மேஸ்திரி முருகவேலிடம் கேட்டு தகராறு செய்தாராம்.அதோடு அவரது மனைவியின் நடத்தை மீதும் சந்தேகம் எழுந்ததாக கூறப்படுகிறது. இதுதொடர்பாக தம்பதி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. இந்நிலையில் கடந்த 7ம் தேதி இரவு 7.30 மணியளவில் பணி முடிந்து முருகவேல் வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். சலவன்பேட்டை ஆனைகுளத்தமன் கோயில் அருகே சென்ற போது அங்கு மறைந்திருந்த விஜிகுமார், முருகவேலை வழிமறித்து ஓட ஓட விரட்டி கத்தியால் குத்தி கொலை செய்தார்.

இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்த தெற்கு போலசார் கொலை குற்றவாளி விஜிகுமாரை வலைவீசி தேடி வந்தனர். இந்நிலையில் இதுதொடர்பாக அமைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையிலான தனிப்படை போலீசார் கர்நாடக மாநிலம் பெங்களூரு அருகே பதுங்கியிருந்த விஜிகுமாரை நேற்று முன்தினம் இரவு கைது செய்தனர்.கைது செய்யப்பட்ட விஜிகுமாரிடம் நடத்திய விசாரணையில் கிடைத்த தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:முருகவேலிடம் அதே சலவன்பேட்டை சூளைமேடு பகுதியை சேர்ந்த விஜிகுமாரும், அவரது மனைவி செல்வியும் கட்டிடத்தொழிலாளிகளாக வேலை செய்து வந்தனர். இந்த நிலையில் முருகவேல் படிப்படியாக விஜிகுமாருக்கு வேலை தருவதை நிறுத்திக் கொண்டாராம். விஜிகுமாரின் மனைவி செல்விக்கு மட்டும் தொடர்ந்து வேலை வழங்கி வந்தாராம்.தனக்கு வேலை வழங்காமல் மனைவிக்கு மட்டும் வேலை வழங்கியது விஜிகுமாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. இதனால் முருகவேல் மீது ஆத்திரத்தில் இருந்த விஜிகுமாரும், அவரது மகன் அஜித்தும் அவரை கொலை செய்ய திட்டம் தீட்டியுள்ளனர். இதற்காக காத்திருந்த நிலையில் கடந்த 7ம் தேதி இரவு பணி முடிந்து வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்த முருகவேலை விஜிகுமார் கத்தியால் குத்தி செய்துள்ளார். இவ்வாறு அவர்கள் கூறினர்.

Tags : mistress ,building worker ,
× RELATED காரிமங்கலம் அருகே பெரியார் பல்கலை விரிவாக்க கட்டிட பணிகாரி