×

நாகர்கோவிலில் மது ஒழிப்பு விழிப்புணர்வு பிரசாரம்

நாகர்கோவில், பிப்.18: மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை சார்பில், மதுபானம், கள்ளச்சாராயம் அருந்துவதினால் ஏற்படும் பாதிப்புகள் மற்றும் தீமைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பிரசார ஊர்வலம் நாகர்கோவிலில் நேற்று நடந்தது. கல்லூரி மாணவ, மாணவிகள் பங்கேற்ற இந்த பிரசார ஊர்வலத்தை நாகர்கோவிலில் கலெக்டர் அலுவலகத்தில் குமரி மாவட்ட கலெக்டர் பிரசாந்த் எம். வடநேரே தொடங்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் நாகர்கோவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரியில் நிறைவடைந்தது. நிகழ்ச்சியில் கலால்துறை உதவி ஆணையர் சங்கரலிங்கம் தலைமை வகித்தார். நாகர்கோவில் ஆர்.டி.ஓ மயில் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னதாக மது ஒழிப்பு தொடர்பான விழிப்புணர்வு ஸ்டிக்கரையும் கலெக்டர் வாகனங்களில் ஒட்டினார்.

Tags : Nagercoil ,
× RELATED இளம்பெண்களை ஆபாச வீடியோ எடுத்து...