×

மகா சிவராத்திரியை முன்னிட்டு 250 சிறப்பு பஸ்கள் இயக்கம்

சென்னை, பிப். 18: மகா சிவராத்திரி வரும் 21ம் தேதி நடைபெறுவதை முன்னிட்டு தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் (விழுப்புரம்) விழுப்புரம் சார்பில், விழுப்புரம்- மேல்மலையனூர் சென்னை- திருவண்ணாமலை, சென்னை-ஸ்ரீகாளஹாஸ்தி மற்றும் குடியாத்தம்-மொகிலி ஆகிய வழித்தடங்களில் வரும் 21ம் தேதி முதல் 22ம் தேதி வரை பக்தர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக 250 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படுகிறது.இவ்வாறு தமிழ்நாடு போக்குவரத்து கழகம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.




Tags : Maha Sivaratri ,
× RELATED தேவதானப்பட்டி மூங்கிலணை...