×

தமிழ் ஆட்சி மொழி சட்ட நாள்கொண்டாட்டம்

திருவள்ளூர், பிப். 18:திருவள்ளூர் கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:தமிழ் ஆட்சி மொழிச் சட்டம் இயற்றப்பட்ட 27.12.1956ம் நாளை நினைவுகூரும் வகையில் ஆட்சிமொழிச் சட்ட வாரம் ஒருவார காலத்திற்கு மாவட்டம் முழுவதும் வருகிற மார்ச் 2ம் தேதி முதல் 8ம் தேதி வரை கொண்டாடப்படுகிறது.அரசு அலுவலகங்கள், வாரியங்கள், கழகங்கள், தன்னாட்சி நிறுவனங்களில் பணிபுரியும் அரசு பணியாளர்கள், மாணவர்கள், தமிழறிஞர்கள் ஆகியோர்களைக் கொண்டு ஒருவார காலம் கொண்டாடப்படும் ஆட்சிமொழிச் சட்ட வார நிகழ்வில்  தமிழறிஞர்கள், தமிழில் கணினி வல்லுநர்கள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொள்கின்றனர். இதில், பொது மக்களும், தமிழறிஞர்களும், ஆர்வலர்களும் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags :
× RELATED புதுப்பாளையம் ஆரணியாற்றில் ₹20...