×

ரயிலில் இருந்து விழுந்து சிறுவன் பலி

தாம்பரம், பிப். 18: ரயிலில் இருந்து தவறி விழுந்த சிறுவன், சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தான்.தாம்பரம் திரிசூலம், வேம்புலி அம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் குருசாமி. இவரது மகன் வினோத் (17). நேற்று காலை வினோத், தாம்பரம் செல்வதற்காக திரிசூலம் ரயில் நிலையத்தில் இருந்து மின்சார ரயிலில் ஏறினார். அப்போது பல்லாவரம் ரயில் நிலையம் அருகே ரயிலில் வந்தபோது வினோத் ரயிலில் இருந்து எதிர்பாராத விதமாக கீழே விழுந்துள்ளார். இதில் அவர் சம்பவ இடத்திலேயே இறந்தார்.தகவலறிந்து தாம்பரம் ரயில்வே போலீசார் சம்பவத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

Tags :
× RELATED ஒரு கரையில் இருந்து மறு கரைக்கு...