×

குளத்தில் மூழ்கி முதியவர் சாவு

தாம்பரம், பிப்.18: தாம்பரம் அடுத்த சேலையூர் அருகே உள்ள வேங்கைவாசல் பகுதியில்  குளம் உள்ளது. இங்கு இப்பகுதியை சேர்ந்த மக்கள் துணி துவைப்பது வழக்கம்.இந்நிலையில் நேற்று காலை அந்த குளத்தில் சுமார் 55 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் மதிந்தது. இதை பார்த்ததும், அங்கு சென்ற பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையறிந்ததும், ஏராள மான மக்கள் அங்கு திரண்டனர்.தகவலறிந்து சேலையூர் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று, சடலத்தை கைப்பற்றி, குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிந்துவிசாரித்தனர்.அதில், வேங்கை வாசல், பாரதி நகர், 3வது தெருவைச் சேர்ந்த முருகன் (55). குளத்தில் துணி துவைப்பதற்காக சென்றபோது தவறி விழுந்து இறந்திருக்கலாம் என தெரியவந்ததாக போலீசார் கூறினர்.

Tags : pond ,
× RELATED கூடலூர் நகராட்சி வருவாயை பெருக்க...