×

முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டிகள்

செங்கல்பட்டு, பிப்.18: செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூரில் உள்ள தனியார் பல்கலைக்கழகத்தில் முதலமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கப்பட்டன. இதனை கலெக்டர் ஜான்லூயிஸ்     தொடங்கி வைத்தார்.
இதில் வீரர்கள், வீராங்கனைகளுக்கான தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வளைகோல்,  கபடி, கையுந்து, இறகுபந்து, ஜூடோ, குத்துச்சண்டை, டென்னிஸ் ஆகிய விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கி நாளை வரை நடைபெற உள்ளது. மாவட்ட அளவிலான தடகளம், நீச்சல், கூடைப்பந்து, வளைகோல், கபடி, கையுந்தது, ஜூடோ, குத்துச்சண்டை, டென்னிஸ், ஆகிய விளையாட்டு போட்டிகளில் முதலிடம் பெற்றவர்களுக்கு குழு விளையாட்டு போட்டியில் தேர்வு செய்யப்படும் அணி மட்டுமே மாநில அளவிலான போட்டிகளில் கலந்து கொள்வார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் செங்கல்பட்டு மாவட்டத்தை சேர்ந்த ஏராளமான விளையாட்டு வீரர்கள், வீராங்கனைகள் கலந்து கொண்டனர்.


Tags : Chief Minister ,
× RELATED டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவாலுக்கு...