×

ஓவியம், வினாடி வினா, கட்டுரை உள்பட பள்ளி மாணவர்களுக்கான போட்டிகள்

திருப்போரூர், பிப். 18: திருப்போரூர் திருக்குறள் பேரவை சார்பில் திருவள்ளுவர் தினத்தையொட்டி பள்ளி மாணவர்களுக்கு இடையேயான திருக்குறள் ஒப்புவித்தல், திருவள்ளுவர் ஓவியம், வினாடி வினா, கட்டுரை ஆகிய போட்டிகள்  திருப்போரூரில் உள்ள தனியார் பள்ளி வளாகத்தில் நடத்தப்பட்டன.பேரவை தலைவர் விஸ்வநாதன் தலைமை தாங்கினார். செயலர் சம்பத்குமார் வரவேற்றார். துணைத் தலைவர் தனஞ்செழியன், இணைச் செயலர் குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

திருப்போரூர் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் குகானந்தம், முன்னாள் தலைமை ஆசிரியை லட்சுமி, கேளம்பாக்கம் திருக்குறள் மன்ற தலைவர் பழனி ஆகியோர் குத்து விளக்கேற்றினர்.திருப்போரூர், கேளம்பாக்கம், நெல்லிக்குப்பம், மாம்பாக்கம், கோவளம், கூத்தவாக்கம் உள்பட பல்வேறு பகுதிகளில் உள்ள 20 பள்ளிகளைச் சேர்ந்த 350 மாணவ, மாணவிகள் இந்த போட்டிகளில் பங்கு பெற்றனர். பின்னர் நடந்த போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளும் சான்றிதழ்களும் வழங்கப்பட்டன.ஓய்வு பெற்ற மாவட்டக் கல்வி அலுவலர் எத்திராஜ், நெம்மேலி அரசு கலைக்கல்லூரி பேராசிரியை தேவி, அரசுப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் மதிச்செல்வன், மேரி ஸ்டெல்லா உள்பட பலர் கலந்துக் கொண்டனர். முடிவில் ஆசிரியை மோகனஜோதி நன்றி கூறினார்.

Tags : school students ,
× RELATED உயர் படிப்புக்கு நுழைவு ேதர்வு எழுத சிறப்பு பயிற்சி துவக்கம்