திருவொற்றியூர்: மணலி மண்டலம் 17வது வார்டுக்குட்பட்ட கொசப்பூரில் மாநகராட்சிக்கு சொந்தமான மயான பூமி உள்ளது. கொசப்பூர், 1ம் பகுதி, விஸ்வநா ததாஸ் நகர், அம்பேத்கர் நகர் போன்ற பகுதி மக்கள் இந்த மயானத்தை பயன்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் மயானம் முழுவதும் முட்செடிகள் வளர்ந்து புதர்மண்டி காணப்பட்டது. இதனால் இறந்தவர்களின் சடலத்தை சுமந்துவரும் பொதுமக்கள் நடக்க முடியாமல் அவதிக்குள்ளாகினர்.மேலும், இங்கு தண்ணீர், மின்விளக்கு வசதி இல்லாததால் இரவு நேரங்களில் இங்கு வரும் பொதுமக்கள் இறுதிச் சடங்கு செய்ய சிரமப்பட்டனர்.