மதுரை, பிப். 17: தினக்கூலி அடிப்படையில், ஊதியம் வழங்கக்கோரி, உழவர் சந்தை பணியாளர்கள் சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். தமிழகத்தில் கடந்த 1999ல் முதன்முறையாக மதுரை அண்ணாநகரில் உழவர் சந்தை துவக்கப்பட்டது. தற்போது தமிழகம் முழுவதும் 179 உழவர் சந்தைகள் இயங்கி வருகிறது. இந்த சந்தையை பராமரிக்க தலா 3 செக்யூரிட்டிகள், ஒரு துப்புரவு பணியாளர் என 4 பேர் வீதம் 716 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஒப்பந்த அடிப்படையில் சம்பளம் வழங்கப்பட்டு வருகிறது. கடந்த 20 ஆண்டுகளுக்கு மேல் இவர்கள் பணியாற்றுகின்றனர்.