திருப்பரங்குன்றம், பிப்.17: திருப்பரங்குன்றத்தில் காவல்துறையினருக்கான மருத்துவ பரிசோதனை முகாம் நடைபெற்றது. இதில் ஏராளமான காவல்துறையினர் குடும்பத்துடன் பங்கேற்றனர். மதுரை மாநகர் காவல்துறை மற்றும் மதுரை சரவணா மருத்துவமனை சார்பில் காவல்துறையினர் மற்றும் அவர்களது குடும்பத்தினருக்கான சிறப்பு மருத்துவ பரிசோதனை முகாம் நேற்று திருப்பரங்குன்றம் சன்னதி தெருவில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது.