திருமங்கலம், பிப்.17: திருமங்கலம் அருகே நின்று கொண்டிருந்த லாரியின் மீது மோதி டூவீலரில் சென்ற வாலிபர் உயிரிழந்தார். திருமங்கலம் அருகேயுள்ள கரிசல்பட்டியை சேர்ந்தவர் அழகர்(40) கூலித்தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் இரவு இவர் டூவீலரில் கள்ளிக்குடியிலிருந்து ஊருக்கு சென்றார். மேலக்கோட்டை சர்வீஸ் ரோட்டில் சென்றபோது இருட்டில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த லாரியை கவனிக்காமல் சென்று படுவேகமாக மோதியுள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே அழகர் உயிரிழந்தார். திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.