பழநி, பிப். 17:பழநியில் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின்கீழ் 5 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளது. பழநி அருள்மிகு பழநியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டுக் கல்லூரியின் மூலம் மத்திய அரசின் உன்னத் பாரத் அபியான் திட்டத்தின் கீழ் கலிக்கநாயக்கன்பட்டி உள்ளிட்ட 5 கிராமங்கள் தத்தெடுக்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின் துவக்கி விழா நிகழ்ச்சி கலிக்கநாயக்கன்பட்டியில் நடந்தது. கல்லூரியின் முதல்வர் பிரபாகர் தலைமை வகித்தார். கலிக்கநாயக்கன்பட்டி ஊராட்சிமன்றத் தலைவர் நாகராஜன், கல்லூரியின் நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் கிருஷ்ணமூர்த்தி, திட்ட அலுவலர் பழனிச்சாமி உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.