சலவை தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

திண்டுக்கல், பிப். 17: சலவைத் தொழிலாளர்கள் திண்டுக்கல்லில் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். சிவகாசி அருகே மூன்றாம் வகுப்பு மாணவி பாலியல் படுகொலையை கண்டித்தும், பாதிக்கப்பட்ட குடும்பத்திற்கு தமிழக அரசு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்தியும் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. தமிழ்நாடு சலவைத் தொழிலாளர்கள் சங்கம், திண்டுக்கல் மாவட்ட வண்ணார்கள் திருக்குருப்பு தொண்டர்கள் சங்கம் சார்பாக ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செயலாளர் செல்வராஜ் தலைமை வகித்தார். மாவட்ட தலைவர் கருப்பையா, வண்ணார் பேரவை மாவட்ட செயலாளர் தியாகராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட பொருளாளர் நாகராஜன் கூறினார்.இதில் பெண்கள் உட்பட நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு பாலியல் வன்கொடுமை செய்து அவர்களை கண்டித்து கோஷங்கள் எழுப்பினர்.

Related Stories: