ஒட்டன்சத்திரம், பிப். 17: ஒட்டன்சத்திரம் கிறிஸ்டியன் பாலிடெக்னிக் கல்லூரியில் கொரோனா வைரஸ் தடுப்பு விழிப்புணர்வு விளக்க கூட்டம் நடந்தது.
முதல்வர் பேராசிரியர் பிரிட்டோ தலைமை வகித்தார். நாட்டு நலப்பணி திட்ட அலுவலர் ஹெரால்டு ஜாக்சன் வரவேற்றார். ஒட்டன்சத்திரம் அரசு வட்டார தலைமை மருத்துவர் டாக்டர் காசி முருகபிரபு, நகர்ப்புற அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்து அலுவலர் டாக்டர் சுபா, சுகாதார ஆய்வாளர் தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டு கொரோனா வைரஸ் பரவும் முறைகள் குறித்தும் அதை தடுக்கும் முறைக்ள குறித்தும் பேசினர். கம்ப்யூட்டர் துறை தலைவர் செந்தில்குமரன் நன்றி கூறினார். இதில் 250க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.