பட்டிவீரன்பட்டி, பிப். 17:பட்டிவீரன்பட்டியில் லயன்ஸ் சங்கம் சார்பில் மாநில அளவிலான மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டில் தேனி, திண்டுக்கல், சிவகங்கை, மதுரை உள்ளிட்ட மாவட்டங்களைச் சேர்ந்த லயன்ஸ் சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். மண்டல தலைவர் சந்திரபாபு தலைமை தாங்கினார். கவர்னர் ராமசாமி முன்னிலை வகித்தார்.விழா குழுத்தலைவர் சித்தாண்டி வரவேற்றார்.