இடைப்பாடி, பிப்.17: கொங்கணாபுரத்தில் ஆடுகள் விற்பனை களைகட்டியது. நேற்று ₹3.5 கோடிக்கு வர்த்தகம் நடந்தது.
சேலம் மாவட்டம், இடைப்பாடி அருகே கொங்கணாபுரத்தில் நேற்று சனிசந்தை கூடியது. மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து 5,800 ஆடுகள், 700 பந்தய சேவல், 2,000 சேவல், கோழிகள், 107 டன் காய்கறிகள் விற்பனைக்கு வந்தது. இதில் 10 கிலோ எடையுள்ள ஆடு ₹5,400, முதல் 6000க்கும், 20 கிலோ எடையுள்ள ஆடு ₹10,400 முதல் 11,500 வரையிலும் விற்பனை செய்யப்பட்டது. வளர்ப்பு குட்டி ஆடு ₹1,200 முதல் 1,700 வரை விலை போனது. பந்தய சேவல்களை மோதவிட்டு அதன் திறனை பொருத்து ₹700 முதல் 2,800 வரை விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட்டது. இதனை வெளியூர் வியாபாரிகள் அதிகளவில் வாங்கி சென்றனர்.