ஆட்டையாம்பட்டி, பிப்.17: வீரபாண்டி ஒன்றியத்தில் தென்னை சாகுபடி குறித்த கருத்தரங்கம் நடைபெற்றது. இதில் விவசாயிகள் கலந்து கொண்டனர்
வீரபாண்டி ஒன்றியத்தில், தென்னை சாகுபடி தொழில்நுட்பங்கள் மற்றும் மதிப்பு கூட்டுதல் குறித்த கருத்தரங்கு, பைரோஜி களஞ்சியம் உழவர் உற்பத்தியாளர் நிறுவனத்தில் நடைபெற்றது. வேளாண்மை உதவி இயக்குனர் நாகபசுபதி வரவேற்று, தென்னை சாகுபடியின் முக்கியத்துவம் மற்றும் மதிப்பு கூட்டுதலால் ஏற்படும் பயன்கள் குறித்து பேசினார். வேளாண்மை இணை இயக்குனர் (பொ) பன்னீர்செல்வம் தலைமை தாங்கி, தென்னை பயிர் காப்பீடு செய்வது பற்றியும், வளர்ந்த தென்னை தோப்புகளை பராமரித்தல், குரும்பை உதிர்தல், மற்றும் பென்சில் முனை குறைபாடு நிவர்த்தி பற்றி எடுத்துரைத்தார்.