வாலிபர் கைது துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளுக்காக

திருச்சியில் நாளை குடிநீர் சப்ளை கட்

திருச்சி, பிப்.17: நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள துணை மின்நிலைய பராமரிப்பு பணிகளுக்காக நாளை (18ம் தேதி) திருச்சியில் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

இதுகுறித்து திருச்சி மாநகராட்சி ஆணையர் சிவசுப்ரமணியன் வெளியிடுள்ள செய்திக்குறிப்பு: திருச்சி ரங்கம்-மேலூர் ஆசிரமம் பகுதியில் அமைந்துள்ள நீர் சேகரிப்பு கிணறு எண் 1, 2, 3 தரைமட்ட நீர்த்தேக்க தொட்டி மற்றும் ஆளவந்தான் படித்துறை நீர் சேகரிப்பு நிலையங்களுக்காக உள்ள ரங்கம் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (18ம் தேதி) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை நடைபெற உள்ளது. எனவே ரங்கம் பகுதி முழுவதும் மற்றும் ரங்கம் கோட்டத்துக்குட்பட்ட சஞ்சீவிநகர், தேவதானம், அரியமங்கலம் கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளான விறகுபேட்டை, மகாலட்சுமி நகர், நேருஜிநகர், அரியமங்கலம், உக்கடை, அரியமங்கலம் கிராமம், ஜெகநாதபுரம், மலையப்பநகர், ரயில் நகர், செந்தண்ணீர்புரம், சங்கிலியாண்டபுரம், பொன்மலை கோட்டத்துக்குட்பட்ட பகுதிகளான முன்னாள் ராணுவத்தினர் காலனி, விவேகானந்தர், ஜேகே.நகர், மேலகல்கண்டார்கோட்டை, பொன்னேரிபுரம், கல்லுக்குழி, பொன்மலைப்பட்டி, மத்திய சிறைச்சாலை, சுப்ரமணியபுரம், விமான நிலைய பகுதி, காமராஜ்நகர், செம்பட்டு, காஜாநகர், காஜாமலை, கே.சாத்தனூர், கே.கே.நகர், தென்றல்நகர், ஆனந்த்நகர், சத்யவானி முத்துநகர், அய்யப்பநகர் மற்றும் கோ.அபிஷேகபுரம் கோட்டத்துக்குட்பட்ட உறையூர், மங்களா நகர், பாத்திமாநகர், சிவாநகர், ரெயின்போநகர், செல்வாநகர், ஆனந்தம்நகர், பாரதிநகர், புத்தூர் பகுதி, எடமலைப்பட்டிபுதூர், அன்புநகர், கிருஷ்ணமூர்த்திநகர், தொண்டைமான்நகர், கிராப்பட்டி போன்ற பகுதியில் நாளை (18ம் தேதி) குடிநீர் விநியோகம் இருக்காது. மறுநாள் வழக்கம்போல் குடிநீர் விநியோகம் செய்யப்படும். அதுவரை குடிநீரை சிக்கனமாக பயன்படுத்துமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர் அதில் கூறி உள்ளார்.

Related Stories: