×

காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் கால பாதுகாப்பு விழிப்புணர்வு

காரைக்கால், பிப்.17: காரைக்கால் மாவட்ட நிர்வாகம் சார்பில் பேரிடர் கால பாதுகாப்பு குறித்து கடலோர கிராம மக்களுக்கு விழிப்புணர்வு செய்முறை விளக்கம் நடைபெற்றது.
காரைக்கால் மாவட்ட நிர்வாகம் மற்றும் சத்யசாய் பேரிடர் நிறுவனமும் இனைந்து | காரைக்கால் பெருந்தலைவர் காமராஜர் நிர்வாக வளாகத்தில், பேரிடர் காலங்களில் பாதுகாப்பாக இருப்பது குறித்து கடலோர கிராமங்களில் வசிக்கும் மீனவ கிராம மக்களுக்கு விழிப்புணர்வு செய்முறை விளக்க நிகழ்ச்சி நடைபெற்றது.
நிகழ்ச்சியை மாவட்ட துனை கலெக்டர் பாஸ்கரன் துவக்கி வைத்து பேசியது: இங்கு நடத்தப்படும் பேரிடர் கால பாதுகாப்பு விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சியை அனைவரும் உள்வாங்கி உங்கள் ஊரில் உள்ளவர்களிடம் இதை பகிர்ந்து கொள்ளவேண்டும். தேவைப்பட்டால் உங்கள் ஊர்களில் இது போன்ற விழிப்புணர்வு ஒத்திகை நிகழ்ச்சி நடத்த ஏற்பாடு செய்யப்படும் என்றார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட மீன்வளத்துறை மற்றும் வருவாய்த்துறை . தீயனைப்புத்துறையினர், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.

Tags : Karaikal District Administration ,
× RELATED திரளான பக்தர்கள் தரிசனம் உலக பூமி...