×

திருமருகல் பகுதியில் குளத்தில் இளம் பெண் சடலம் மீட்பு

நாகை,பிப்.17: நாகை அருகே குளத்தில் இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாகை அருகே திருமருகல் பகுதியில் உள்ள குளத்தில் 20 வயது நிறைந்த பெண் இறந்த நிலையில் கிடப்பதாக திட்டச்சேரி போலீசாருக்கு நேற்று முன்தினம் தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று உடலை கைப்பற்றி அவர் யார், எந்த ஊரைச் சேர்ந்தவர் என்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில் அவர் திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் பாப்பாலம்மன் கோயில் தெருவைச் சேர்ந்த மகேஸ்வரி(20) என்பதும். இவர் கடந்த 13ம் தேதி திருமருகல் சீராளன் குளம் மேல்கரையை சேர்ந்த தனது தாத்தா பக்கிரிசாமி வீட்டிற்கு வந்தார். மீண்டும் மறுநாள்(14ம் தேதி) வீட்டை விட்டு சென்ற மகேஸ்வரியை காணவில்லை என்பது தெரியவந்தது. இது குறித்து மேலும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags : pond ,
× RELATED மதுராந்தகத்தில் பாசி படர்ந்து...