×

விவசாயிகள் எதிர்பார்ப்பு காரைக்காலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு ஊர்வலம்

காரைக்கால், பிப்.17: புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் சார்பில், காரைக்காலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதில் கல்லூரி மாணவர்கள் பங்கேற்றனர்.
புதுச்சேரி எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கமும், காரைக்கால் அரசு பொது மருத்துவமனையும் இணைந்து, காரைககலில் எய்ட்ஸ் விழிப்புணர்வு பேரணியை நடத்தியது. மாவட்ட கலெக்டர் அலுவலக வாயிலில் தொடங்கிய, இந்த விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட துணை கலெக்டர் பாஸ்கரன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
பேரணி, காரைக்கால் அம்பேத்கர் சாலை, பாரதியார் சாலை, பாரதியார் சாலை, உள்ளிட்ட முக்கிய சாலைகள் வழியாக சென்று, காரைக்கால் புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள தந்தை பெரியார் அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நிறைவு பெற்றது. ஊர்வலத்தில், மாவட்டத்தின் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த நாட்டு நலப்பணித்திட்ட மாணவ, மாணவிகள் நூற்றுக்கு மேற்பட்டோர், எய்ட்ஸ் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்தி சென்றனர்.ஊர்வலத்தை மாவட்ட அரசு பொது மருத்துவமனை கண்காணிப்பாளர் டாக்டர் சித்ரா, உள்ளிருப்பு மருத்துவ அதிகாரி மதன்பாபு, நாட்டு நலப்பணித்திட்ட ஒருங்கிணைப்பாளர் லட்சுமணபதி உள்ளிட்ட பலர் வழி நடத்தி சென்றனர்.

Tags : AIDS awareness rally ,Karaikal ,
× RELATED வெயிலின் தாக்கம் அதிகரிக்க வாய்ப்பு;...