×

காரைக்காலில் பைக் திருடிய வாலிபர் கைது

காரைக்கால், பிப்.17: காரைக்காலில் அதிக அளவு பைக்குகள் திருடு போவதாக வரும் தொடர் புகாரையடுத்து, மாவட்ட போலீஸ் எஸ்.எஸ்.பி மகேஸ்குமார் பன்வால் உத்தரவின் பேரில், போலீஸ் எஸ்.பி வீரவல்லபன் மேற்பார்வையில், அந்தந்த காவல்நிலைய போலீசார் தீவிர தேடுதலில் ஈடுபட்டு வந்தனர்.
கடந்த 13ம் தேதி, காரைக்கால் பேருந்து நிலையத்தில் மேலும் இரு பைக்குகள் திருடு போனதாக வந்த புகாரையடுத்து, நகர காவல்நிலைய இன்ஸ்பெக்டர் சண்முகம், சப்.இன்ஸ்பெக்டர்கள் முகம்மது ஷேக், அலாவுதீன், ராமசாமி மற்றும் போலீசார், தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
பேருந்து நிலையம் அருகே நேற்று போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தபோது சந்தேகத்திற்கு இடமாக வந்த ஒரு பைக்கை நிறுத்தி, விசாரணை நடத்தியதில், பைக்கில் வந்த இருவர் முன்னுக்கு பின் பதில் கூறினர். தொடர்ந்து, காவல்நிலையம் அழைத்து சென்று தீவிர விசாரணை நடத்தியபோது, காரைக்கால் தலத்தெரு காளியம்மன் கோவில் தெருவை சேர்ந்த மஞ்சுரேக்கர்(26), அதே பகுதியை சேர்ந்த 17 வயது சிறுவன் என்பதும், கடந்த 13ம் தேதி, தற்போது ஓட்டிவந்த பைக்கை பேருந்து நிலையத்தில் திருடியது என்றும், மேலும் ஒரு பைக்கை கடந்த சில தினங்களுக்கு முன் பேருந்து நிலையத்தில் திருடியதையும் ஒப்பிகொண்டனர். தொடர்ந்து, இருவரையும் கைது செய்த போலீசார், அவர்களிடமிருந்த இரு பைக்கையும் போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags : Karaikal ,
× RELATED விழிப்புணர்வு வாசகத்துடன் பால்...