கோவை, பிப்.17: கோவை புது சித்தாபுதூர் பகுதியை சேர்ந்தவர் பாலசுப்ரமணியம் (37). தள்ளுவண்டியில் டிபன் கடை நடத்தி வந்தார். நேற்று முன் தினம் இவர் தனது வீட்டில் கிரைண்டரில் மாவு அரைத்து கொண்டிருந்தார். அப்போது மின்சாரம் தாக்கி இறந்தார். காட்டூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.