ஈரோடு, பிப். 17: ஈரோட்டில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்ததாக 2 பேரை போலீசார் கைது செய்தனர். ஈரோடு கிருஷ்ணம்பாளையம் ஜீவா நகர் பகுதியைச் சேர்ந்தவர் திருநாவுக்கரசு (26). இவர் காவேரிரோடு பழைய ரிஜிஸ்டர் அலுவலகம் அருகே நின்று கொண்டிருந்தபோது கருங்கல்பாளையம் கிருஷ்ணம்பாளையம் ரோடு பகுதியைச் சேர்ந்த முத்துப்பாண்டி (32) என்பவர் வந்துள்ளார். பின்னர் தன்னிடம் லாட்டரி சீட்டுகள் வாங்கும்படி கூறியுள்ளார். ஆனால் திருநாவுக்கரசு லாட்டரி சீட்டுகள் வாங்க மறுத்த நிலையில் முத்துப்பாண்டி கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த கருங்கல்பாளையம் போலீசார் முத்துப்பாண்டியை கைது செய்தனர்.