×

பெண்ணுக்கு அரிவாள் வெட்டு

சென்னை, பிப். 17: சென்னை வியாசர்பாடியை சேர்ந்தவர் நாகூர்கனி (50). இவரது மனைவி பாத்திமா (45). இவர்களது மகள் நிஷா (30). இவரும், அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் என்பவரும் கடந்த 8 ஆண்டுக்கு முன்பு காதல் திருமணம்  செய்து கொண்டனர். கருத்து வேறுபாடு காரணமாக நிஷா, சீனிவாசன் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. வழக்கம் போல் நேற்று முன்தினமும் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் நிஷா கோபித்து கொண்டு தனது தாய் வீட்டுக்கு  சென்றுவிட்டார்.
சீனிவாசன் போதையில் மாமியார் வீட்டுக்கு சென்று, நிஷாவை அனுப்புமாறு கேட்டு கோபம் அடைந்த சீனிவாசன் மறைத்து வைத்திருந்த அரிவாளால் பாத்திமாவை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பி விட்டார்.


Tags :
× RELATED மதுராந்தகம் காவல் நிலையம் அருகே...