×

பொதுநல சங்கத்திற்கு சொந்தமான இடத்தில் காவல் நிலையம் கட்ட மக்கள் எதிர்ப்பு

ஆலந்தூர், பிப். 17: ஆதம்பாக்கம் மண்ணடியம்மன் கோயில் தெருவில் பொதுநல சங்கத்திற்கு சொந்தமான 6 ஆயிரம் சதுரஅடி பரப்பளவு கொண்ட இடம் உள்ளது. இந்த இடத்தில் ஆதம்பாக்கம் காவல் நிலையம் கொண்டுவர முயற்சிகள்  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.இதற்கு பொது நல சங்க நிர்வாகிகள் மத்தியில் எதிர்ப்பு கிளம்பியது. இதனையடுத்து மடிப்பாக்கம் உதவி கமிஷனர் சவுரிநாதன் மற்றும் ஆதம்பாக்கம் காவல் நிலைய இன்ஸ்பெக்டர் பாலன் ஆகியோர் பொது நல சங்க நிர்வாகிகள் மற்றும் ஊர்  பொதுமக்களை காவல் நிலையத்துக்கு அழைத்து சமாதான பேச்சு வார்த்தை நடத்தினர். இதற்கு ஒத்துழைக்குமாறும் கேட்டுக்கொண்டனர்.

ஆனால், அங்கு வந்த ஊர் பெரியவர்கள் முத்து, விஜயன், பிரகாஷ், பூவராகவன் ஆகியோர் ஏழை, எளிய மக்களின் கல்விக்காகவும், சின்ன சின்ன விசேஷங்களுக்காகவும் பயன்படுத்தப்படும் இந்த இடத்தினை விட்டு கொடுக்க முடியாது என  உறுதியாக கூறினர். அப்போது உதவி கமிஷனர் சவுரிநாதன், ‘‘ஆதம்பாக்கம் காவல் நிலையத்தில் போதிய வசதி இல்லாததால் இதனை வேறு இடத்திற்கு மாற்ற இடம் கேட்டபோது வருவாய்த்துறை அதிகாரிகள் இந்த இடத்தினை பரிந்துரை  செய்துள்ளனர். வெறும் 2 ஆயிரம் சதுர அடி மட்டும் நீங்கள் கொடுத்தால் போதுமானது. மேலும் காவல் நிலையம் வருவது உங்களுக்குத்தான் பெருமை’’ என்றார்.



Tags : police station ,PSU ,
× RELATED திருப்போரூர் காவல் நிலையத்தில் மின்மாற்றியில் தென்னை ஓலை உரசி தீ விபத்து