ஆலந்தூர்: திருவொற்றியூர், சக்தி நகரை சேர்ந்தவர் சுப்பிரமணி (46). இவர், ஆதம்பாக்கம், சிட்டி லிங்க் சாலையில் ஒரு தனியார் வங்கியில் கடந்த 10 ஆண்டுகளாக நகை மதிப்பீட்டாளராக பணியாற்றி வருகிறார். இந்நிலையில், ஆதம்பாக்கம், எஸ்பிஐ காலனியை சேர்ந்த ராஜம்மாள் என்பவர், இந்த வங்கியில் போலி நகைகளை அடமானம் வைத்துள்ளார். இவற்றை சுப்பிரமணி தங்க நகை என மதிப்பீடு செய்து, 18 லட்சம் நகை கடன் அளித்துள்ளார். இதை அதிகாரிகள் சோதனை செய்தபோது போலி என தெரியவந்தது. இதுகுறித்து வங்கி மேலாளர் சீனிவாசன் மற்றும் உயர் அதிகாரிகள், ஆதம்பாக்கம் போலீசில் சுப்பிரமணி மற்றும் ராஜம்மாள் ஆகியோர் மீது வங்கி உயர் அதிகாரிகள் புகார் அளித்தனர்.