கன்னங்குறிச்சியில் சிறுமி மாயம்

சேலம், பிப்.13:சேலம் கன்னங்குறிச்சியில் மாயமான 17 வயது சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.சேலம் சின்னத்திருப்பதி காந்திநகரை சேர்ந்தவர் அசோகன். இவரது மகள் நிர்மலா (17). இவர், கடந்த 9ம் தேதி வீட்டில் இருந்து வெளியேச் சென்றுள்ளார். பின்னர் அவர், வீடு திரும்பவில்லை. உறவினர்கள் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடி பார்த்தும் சிறுமி நிர்மலாவை காணவில்லை. இதுபற்றி அவரின் தாயார் பிரியா, கன்னங்குறிச்சி போலீசில் புகார் கொடுத்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து, மாயமான சிறுமி நிர்மலாவை தேடி வருகின்றனர்.

Related Stories: