×

தென்னைக்கு உரமிடும் வழிமுறைகள் வேளாண்மை அதிகாரி தகவல்

பெரம்பலூர், பிப்.13: தென்னை மரங்களுக்கு இட வேண்டிய உர அளவுகள் குறித்து விவசாயிகளுக்குஆலேசனைவழங்கப்பட்டது தென்னைக்கு உரமிடுவதற்கு ஏதுவாக தற்போது கடைமடை பகுதிகளில் நல்ல மழை பெய்து வருகிறது.
இதனை பயன்படுத்தி நாட்டு ரக (நெட்டை ரகம்) தென்னைகளுக்கு நடவு செய்தது முதல் ஒரு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 10 கிலோ, யூரியா 325கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 500கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500கிலோவும், இரண்டு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 20கிலோ, யூரியா 650கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1 கிலோ, வேப்பம்புண்ணாக்கு 2.500கிலோவும், மூன்று வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 30கிலோ, யூரியா 975கிராம், சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 1.500கிலோ, வேப்பம்புண்ணாக்கு 3.750கிலோவும், நான்கு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 40கிலோ, யூரியா 1.300கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2கிலோ, வேப்பம் புண்ணாக்கு 5கிலோவும், ஐந்து வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 50கிலோ, யூரியா 1.300கிலோ, சூப்பர் மற்றும் பொட்டாஷ் தலா 2கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5கிலோவும், வீரிய ஒட்டு (நெட்டை, குட்டை மற்றும் குட்டை, நெட்டை)

தென்னைகளுக்கு ஒரு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 15கிலோ, யூரியா 500கிராம், சூப்பர் 375கிராம், பொட்டாஷ் 750கிராம், வேப்பம்புண்ணாக்கு 1.500கிலோவும், இரண்டு வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 30 கிலோ, யூரியா 1கிலோ, சூப்பர் 750கிராம், பொட்டாஷ் 1.500கிலோ, வேப்பம்புண்ணாக்கு 2.500கிலோவும், மூன்று வருட கன்று ஒன்றுக்கு தொழு உரம் 45 கிலோ, யூரியா 1.500 கிலோ, சூப்பர் 1.150கிலோ,பொட்டாஷ் 2.250கிலோ, வேப்பம்புண்ணாக்கு 3.750கிலோவும், நான்கு வருடம் மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய மரம் ஒன்றுக்கு தொழு உரம் 60கிலோ, யூரியா 2.250கிலோ, சூப்பர் 1.500கிலோ, பொட்டாஷ் 3கிலோ, வேப்பம்புண்ணாக்கு 5கிலோவும் இட வேண்டும். மேற்கண்ட உர பரிந்துரை அளவினை சம பங்காக பிரித்து வருடத்தில் இரு முறை இட வேண்டும், அதாவது மார்கழி, தை மாதங்களில் ஒரு முறையும், ஆனி, ஆடி மாதங்களில் ஒரு முறையும் இட வேண்டும் மேற்கண்ட உரங்களை இட்ட 30 முதல் 45 நாட்கள் கழித்து தென்னை நுண் சத்து உரத்தினை மரம் ஒன்றுக்கு ஒரு கிலோ வீதம் இட வேண்டும் இவ்வகை உரங்களை மரத்தை சுற்றி 5 அடி தூரத்தில் இட்டு மண்ணை கிளறிவிட்டு உடனடி தண்ணீர் பாய்ச்ச குறைந்து ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 150முதல் 200 தேங்காய்கள் வரை கண்டிப்பாக மகசூல் எடுக்க முடியும், இவ்வாறு வேளாண் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Tags :
× RELATED வாக்களிப்பதன் அவசியம் குறித்து...