×

திருவலம் அருகே அரசு மது பதுக்கி விற்ற பெண் கைது

திருவலம், பிப்.13: திருவலம் அடுத்த சுகர்மில் பகுதியில் உள்ள வீட்டில் அரசு மதுபானங்களை பதுக்கி வைத்து அதிக விலைக்கு விற்பதாக நேற்று முன்தினம் மாலை  திருவலம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அப்பகுதியில் ரோந்து பணியில் போலீசார்  ஈடுபட்டனர். அப்போது வேல்நகரில் உள்ள வீட்டில் மதுபானங்களை பதுக்கி வைத்திருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து பதுக்கி வைத்திருந்த மணியின் மனைவி  ஜெயலட்சுமி(50) என்பவரை கைது செய்து, 8 குவார்ட்டர் பாட்டில்களை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags : Tiruvalam ,
× RELATED திருடிய 5 பைக்குகளுடன் 2 வாலிபர்கள் கைது திருவலம் அருகே