ஸ்பிக்நகர், பிப்.13: முத்தையாபுரம் பகுதியில் ஓட்டல் உள்பட 6 கடைகளில் திருடிய வாலிபர் கைது செய்யப்பட்டார். தூத்துக்குடி முத்தையாபுரம் சுந்தர்நகர் பகுதியைச் சேர்ந்தவர் சக்திவேல்(52). இவர் தவசிபெருமாள் சாலையில் ஓட்டல் வைத்துள்ளார். இரவு கடையை அடைத்துவிட்டு நாகர்கோவிலில் நடந்த திருமண வீட்டிற்கு சென்றுவிட்டார். மறுநாள் காலை கடையில் வேலை பார்க்கும் சங்கர் கடையை திறந்து பார்த்தபோது கடையின் பின்புறம் ஆஸ்பெட்டாஸ் சீட் உடைக்கப்பட்டு கடையில் இருந்த ரூ.1200 திருட்டு போனது தெரியவந்தது. இதேபோல் முத்தையாபுரம் தங்கமணி நகரை சேர்ந்தவர் பெருமாள். சம்பவத்தன்று இரவு நெல்லைக்கு சென்றுவிட்டதால் அவருடைய மனைவி பரமேஸ்வரி கடையை பூட்டிவிட்டு சென்றார். காலையில் எழுந்து பார்த்தபோது கடையின் உள்பக்க கதவு திறந்து கிடப்பதையும், கடையில் வைத்திருந்த ரூ.1500 திருடு போயிருந்ததையும் கண்டு அதிர்ச்சியடைந்தார்.