ஆட்டோ மீது லாரி மோதி பெண் உள்பட 3 பேர் காயம்

ஸ்பிக்நகர், பிப். 13: தூத்துக்குடி திருச்செந்தூர் ரவுண்டானாவில் ஆட்டோ மீது லாரி மோதியதில் 3பேர் படுகாயமடைந்தனர். தூத்துக்குடி தாளமுத்துநகர் பகுதியைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன் மகன் செல்வபதி(42) ஆட்டோ டிரைவரான இவர் ஆட்டோவில் பயணிகளை ஏற்றிக்கொண்டு திருச்செந்தூர் கோவிலுக்கு சென்று கொண்டிருந்தார். முத்தையாபுரம் உப்பாத்து ஓடை ரவுண்டானா அருகே வந்தபோது புதிய துறைமுகத்திலிருந்து வேகமாக வந்த லாரி, ஆட்டோ மீது மோதியது.

இதில் ஆட்டோ அப்பளம் போல் நொறுங்கியது. ஆட்டோ டிரைவர் செல்வபதி, தாளமுத்துநகரைச் சேர்ந்த மைதீன் மனைவி பீமா(32), சுடலை மகன் சந்தானகுமார்(42) ஆகியோர் காயமடைந்தனர். தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் காயமடைந்தவர்களை மீட்டு தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: