பிப்.15க்குள் பயிர் காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு அறிவுறுத்தல்

திருச்செந்தூர்,  பிப். 13: திருச்செந்தூர் வட்டார விவசாயிகள் பயிர் இழப்பை தவிர்த்திட  பிப்., 15ம் தேதிக்குள் பயிர் காப்பீடு செய்து பயன் பெற வேளாண்மை உதவி  இயக்குநர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுகுறித்து திருச்செந்தூர் வட்டார  வேளாண்மை உதவி இயக்குநர் வெங்கடசுப்பிரமணியன் வெளியிட்டுள்ள  செய்திகுறிப்பில் தெரி வித்துள்ளதாவது: திருச்செந்தூர் வட்டாரத்தில்  தற்போது நவரை மற் றும் கோடை பருவத்தில் சுமார் 2100  ஏக்கர் பரப்பளவில்  நெல் சாகுபடி செய்யப்பட்டு உள்ளது. புயல், வெள்ளம், வறட்சி போன்ற இயற்கை  சீற்றங்களிலிருந்து பயிர்களுக்கு பாதிப்பு ஏற்படும் பொழுதும், பூச்சி நோய்  தாக்குதலினால் பயிருக்கு சேதம் ஏற்படும் போதும் பயிர்களுக்கு ஏற்படும்  மகசூல் குறைவிற்கு  நிவாரணம் அளிக்கும் பொருட்டு பயிர் காப்பீடுத்திட்டம்  செயல்படுத்தப்படுகிறது. 2019-20 ஆ ண்டுக்கான பிரதம மந்திரியின் பயிர்  காப்பிட்டுத்திட்டம் தூத்துக்குடி மாவட்டத்தில் அக்ரிகல்ச்சர் இன்சூரன்ஸ்  நிறுவனத்தால் நடத்தப்படுகிறது.

இத்திட்டத்தில் பயிர் கடன் பெறும்  விவசாயிகள் மற்றும் கடன் பெறாத அனைத்து விவசாயிகளுக்கும் ஒரே பிரீமியத்  தொகை மற்றும் காலக்கெடு நிர்ணயம்  செய்யப்பட்டுள்ளது. மேலும் பிரதம  மந்திரியின் பயிர் காப்பிட்டுத் திட்டத்தில் விவசாயிகள் தாங்கள் பிரீமியம்  கட்டும் காலத்திற்கு ஏற்றவாறு விதைக்க இயலாத சூழ்நிலை, விதைப்பு பொய்த்தல்,  மகசூல் இழப்பு ஆகிய நிலைகளில் பயிர் இழப்பீடு பெற்றிட வாய்ப்புகள் உள்ளன.  எனவே நவரை மற்றும் கோடை பருவ  நெல் பயிருக்கு பிப். 15ம் தேதிக்குள்  பிரீமியம் செலுத் தினால் பயிர் அறுவடை பரிசோதனை அடிப்படையில் விதிமுறை  களுக்கு ஏற்ப இழப்பீடு பெற வழி உள்ளது. விவசாயிகள் பயிர் காப்பீடு பிரீமியமாக ஒரு ஏக்கர் நெல் பயிருக்கு ரூ.403.50 (அ) ரூ.404 மட்டும்  செலுத்த வேண்டும். விவசாயிகள் பிரீமியக் கட்டணத்தை தொடக்க வேளாண்மை  கூட்டுறவு வங்கிகள், தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகள் மற்றும் பொது இ சேவை  மையங்களிலும் செலுத்தலாம். மேலும் விவரங்களுக்கு திருச்செந்தூர் வட்டார  வேளாண் அலுவலர், துணை வேளாண் அலுவலர், உதவி வேளாண் அலுவலர்களை தொடர்பு  கொண்டு பயன் பெறலாம்.

Related Stories: