சொத்து தகராறில் சகோதரரை தாக்கியவர் மீது வழக்கு

நாங்குநேரி, பிப். 13:  மூலைக்கரைபட்டி அருகே அரியகுளத்தை சேர்ந்தவர் முருகன் (57). தற்போது பாளையங்கோட்டை வி.எம்.சத்திரத்தில் வசித்து வருகிறார். இவருக்கும் அவரது சகோதரர் சுடலைக்கண்ணு என்பவருக்கும் சொத்து தொடர்பாக முன்விரோதம் இருந்து வருகிறது. இந்நிலையில் நேற்று வயலுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் முருகனை, சுடலைக்கண்ணு அவதூறாக பேசி தாக்கினாராம். புகாரின்பேரில் மூலைக்கரைப்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் துரை வழக்கு பதிந்து சுடலைக்கண்ணுவை தேடி வருகிறார்.

Related Stories: