கோடை துவங்கும் முன்னரே விற்பனைக்கு வந்த இளநீர் தஞ்சை மாவட்டத்தில் 184 நெல் கொள்முதல் நிலையங்களில்

தஞ்சை, பிப்.13: தஞ்சை மாவட்டத்தில் 184 நேரடி கொள்முதல் நிலையங்களில் குடிமைப்பொருள் வழங்கல்துறை குற்றப் புலனாய்வுத் துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தஞ்சை உள்ளிட்ட டெல்டா மாவட்டங்களில் சம்பா சாகுபடி செய்யப்பட்டு தற்போது அறுவடைப் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் கொள்முதல் நிலையங்களில் நெல்லை கொள்முதல் செய்ய காலதாமதம் ஏற்படுவதாகவும், அறுவடை செய்யப்பட்ட நெல்லுடன் 20 நாட்களாக காத்திருக்க நிலை ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் நாள் ஒன்றுக்கு 500 முதல் 750 வரை கூடுதல் செலவு ஏற்படும் விவசாயிகள் புகார் அளித்தனர். மேலும், கொள்முதல் நிலையங்களில் மூட்டை ஒன்றுக்கு ரூ. 40 வரை கட்டாய வசூல் செய்யப் படுவதாகவும், உடனடியாக கூடுதல் நெல் கொள்முதல் நிலையங்களை திறந்து ஒரு நாளைக்கு 1500 வரை கொள்முதல் செய்ய வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

இந்நிலையில் நேற்று தஞ்சை மாவட்டத்தில் 184 நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத் துறை இயக்குனர், உணவு வழங்கல் துறை அதிகாரிகள் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

இந்தஆய்வில் விவசாயத்திலிருந்து உரிய முறையில் கொள்முதல் செய்யப்படுகிறதா, கொள்முதல் செய்யப்பட்ட நெல்லுக்கு 24 மணி நேரத்தில் பணம் பட்டுவாடா செய்யப்படுகிறதா, மேலும் தனியார் வியாபாரிகளிடம் கொள்முதல் செய்யப்படுகிறதா, மூட்டையின் அளவு சரியாக உள்ளதா என ஆய்வு மேற்கொண்டனர்.

தஞ்சை மாவட்டம் திருவிடைமருதூரில் உள்ள நேரடி கொள்முதல் நிலையத்தில், உணவுத்துறை அமைச்சர் காமராஜ், குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வு துறை இயக்குனர் பிரதீப் விபிலிப், உணவு வழங்கல் துறை செயலாளர் தயானந்தா கட்டாரியா, தஞ்சை மாவட்ட ஆட்சியர் கோவிந்தராவ், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண்மை இயக்குனர் சுதாதேவி, குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுத்துறை கண்காணிப்பாளர் ஸ்டாலின், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் தஞ்சை முதுநிலை மண்டல மேலாளர் கதிரேசன் ஆகியோர் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இதேபோல் தஞ்சை சூரக்கோட்டை, மடிகை உள்ளிட்ட அப்பகுதிகளில் உள்ள நேரடிக் கொள்முதல் நிலையங்களில் நான்கு பேர் கொண்ட குழுவினர் சோதனையில் மேற்கொண்டனர்.

தஞ்சை, பிப்.13: தஞ்சையில் கோடைகாலம் துவங்கும் முன்னரே பொள்ளாச்சியில் இருந்து இளநீர் விற்பனைக்கு வந்துள்ளது. இவ்வாண்டு கோடைகாலம் துவங்கும் முன்னரே வெயில் கொளுத்த துவங்கியுள்ளது. இதனால் வரும் கோடைகாலத்தை எப்படி சமாளிக்கப்போகிறோம் என கவலையடைந்துள்ளனர். உடல் சூட்டை தணிக்கும் தர்பூசணி கடைகள் சாலையோரம் ஆங்காங்கே விற்பனை நடைபெற்று வருகிறது. ஜூஸ், சர்பத் கடைகளும் சாலையோரம் மரத்தடியில் வைத்து விற்கப்படுகிறது. இதபோல் இளநீர் மனிதர்களுக்கு தென்னை மரம் அளிக்கும் இயற்கையான ரசாயனமில்லாத பானமாகும். இளநீரை மனிதர்கள் பருகுவதால் ஏற்படும் பல்வேறு உடல்நல ரீதியிலான நன்மைகள் ஏற்படும். இளநீரை பருகுவதால், அரிப்பு நோய் எனப்படும் சோரியாசீஸ் கிருமிகளை உடலில் தங்க விடாமல் வெளியேற்றுகிறது. இதனால் தோல்களை காப்பாற்றுகிறது.

உடல் சோம்பலாகும் போது, இளநீரை பருகுவதால், உடலுக்கு தேவையான சத்துக்கள் கொடுத்து, சுறுசுறுப்பாகும். இதனால் நாள் முழுவதும் புத்துணர்ச்சியாக இருக்கும். தினந்தோறும் இளநீரை குடித்து வந்தால், ரத்தத்திலுள்ள கொலஸ்டிரால் அளவு வெகுவாக குறையும். மன அழுத்தம் குறைந்து, இதயத்தை பாதுகாக்கிறது. மேலும் மலச்சிக்கல், செரிமான கோளாறுகள் ஏற்படாமலும், மதுபோதை தெளிவதற்கும், நீரிழிவு நோயிலிருந்து கட்டுப்படவைக்கிறது. இத்தகைய சிறப்பு வாய்ந்து அருமருந்தான இளநீர், தற்போது கோடை காலம் தொடங்கவுள்ளதையடுத்து, பொள்ளாச்சியிலிருந்து, தஞ்சை பகுதிக்கு விற்பனைக்காக வந்துள்ளது. தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை, பேராவூரணி, ராஜகிரி உள்ளிட்ட பகுதிகளில் தென்னை சாகுபடி அதிகமாக இருந்தாலும், அந்த தென்னை மரத்தின் இளநீரில் சுமார் 250 மிலி அளவு தண்ணீர் இருக்கும். ஆனால் பொள்ளாச்சி இளநீரில் சுமார் 500 மிலி அளவு தண்ணீர் இருப்பதால், பொள்ளாச்சி இளநீரையே விரும்பி வாங்கி பருகுகின்றனர்.

தஞ்சை சர்க்யூட் அவூஸ் சாலையில் விற்பனை செய்யும் பொள்ளாச்சி இளநீர் சுமார் ரூ. 40க்கு விற்பனை செய்கின்றார்கள். ஆனால் தஞ்சை பகுதியிலுள்ள இளநீரை ரூ. 20க்கு விற்பனை செய்கிறார்கள். எனவே, தற்போது வெயில் அதிகஅளவில் அடித்து வரும் நிலையில், கோடை காலத்தில் இன்னமும் அதிகமாக வெயில் அடித்தால், இளநீரின் விலை உயரவாய்ப்புள்ளது என பொள்ளாட்சி இளநீர் வியாபாரிகள் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து பொள்ளாச்சி இளநீர் விற்பனை செய்யும் வியாபாரி ஒருவர் கூறுகையில், தென்னை சாகுபடிக்கேற்ற பருவநிலை பொள்ளாச்சி மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ளதால் இளநீர் உற்பத்தியில் பொள்ளாச்சி சிறந்து விளங்குகிறது. இளநீரில் அதிக அளவு தண்ணீர் இருப்பதால் வெளி மாவட்ட, மாநில வியாபாரிகள் பொள்ளாச்சி இளநீரை கொள்முதல் செய்து, மொத்தமாக வாங்கி சென்று விற்பனை செய்கின்றார்கள்.

பொள்ளாச்சியை அடுத்த ஆனைமலை, ஆழியாற்றுப் பகுதியில் பெரும்பாலான பரப்பளவில் தென்னை சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. இளநீர்வெட்டி எடுத்து வந்த பிறகும், சுமார் 6 நாட்கள் தரம் மாறாமல் இருப்பதால் இங்கு விளையும் இளநீருக்கு அதிக சிறப்பு உண்டு. மேலும் அரைலிட்டர் வரை தண்ணீர் இருக்கும். அதுவும் நல்ல ருசியாக இருப்பதனால் பொள்ளாட்சி இளநீரை விரும்பிப் பருகி வருகிறார்கள். வருடந்தோறும் பொள்ளாச்சி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இருந்து வெளி மாவட்ட, மாநிலங்களுக்கு தினமும் சுமார் ஒரு லட்சம் இளநீர், லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. லாரி மூலம் கொண்டு வந்து தஞ்சை, நாகை , திருவாரூர் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களுக்கு கொண்டு, அங்கு விற்பனை செய்கிறோம் என்றார்.

Related Stories: