பாவூர்சத்திரம் வட்டார பள்ளிகளில் இலவச சைக்கிள்கள் வழங்கும் விழா

பாவூர்சத்திரம், பிப்.12: த.பி.சொக்கலால் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்களுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்களை செல்வ மோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார். நிகழ்ச்சிக்கு பள்ளி தலைமையாசிரியர் சதீஷ் கிங்ஸ்லி தலைமை வகித்தார். நிகழ்ச்சியில் 160 மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்எல்ஏ வழங்கினார். ஆசிரியர் லட்சுமி காந்தன் நன்றி கூறினார்.

அயன் குறும்பலாப்பேரி அரசு மேல்நிலைப்பள்ளியில் 40 மாணவ, மாணவிகளுக்கு சைக்கிள் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் பள்ளி தலைமையாசிரியர் வெங்கடேசன் வரவேற்றார். செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ  மாணவர்களுக்கு இலவச சைக்கிள்களை  வழங்கி பேசினார். நிகழ்ச்சியில் ஆசிரியர்கள் அந்தோணி ஜெய்சிங், சுகுமார், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் இளமதி மற்றும் பலர் பேசினர்.

விழாவில் ஆர்.எம்.எஸ்.ஏ. மூலம் நடத்தப்பட்ட செயல்திட்டத்தில் சமூக அறிவியல் பாடத்தில் மாநில அளவிலும் மற்றும் அறிவியல் பாடத்தில் மாவட்ட அளவிலும் கலந்து கொண்டு வெற்றி பெற்ற மாணவ மாணவிகளுக்கு பரிசுகளும் நரேந்திரமோடியின் தூய்மை இந்தியா திட்டத்தின் கீழ் வட்டார அளவில் நடத்தப்பட்ட கட்டுரைப் போட்டியில் முதலிடம் பிடித்த மாணவி உமாபாரதிக்கு பரிசுகள் மற்றும் சான்றிதழ்களையும் செல்வ மோகன் தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ.  வழங்கினார். மாணவிகளின் கலை நிகழ்ச்சி நடைபெற்றது. ஆசிரியை சித்ராதேவி நன்றி கூறினார்.நிகழ்ச்சிகளில் ஒன்றிய செயலாளர் அமல்ராஜ், முன்னாள் யூனியன் துணைத்தலைவர் உத்திர குணபாண்டியன், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் தமிழ்ச்செல்வன் என்ற ராமசாமி, மணிவண்ணன், முன்னாள் கவுன்சிலர் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related Stories: