தென்காசி, பிப்.12: தென்காசியில் ஓய்வுபெற்ற அலுவலர் சங்கத்தின் தென்காசி மாவட்ட சங்கம் மற்றும் தென்காசி கிளை சங்கம் தொடக்க விழா நடந்தது. சங்கத் தலைவர் வைரவன் தலைமை வகித்தார். கவுரவத் தலைவர்கள் துரைதம்புராஜ், லிங்கராஜ் முன்னிலை வகித்தனர். துணைத்தலைவர் ராமசாமி வரவேற்றார். செங்கோட்டை துணை வேளாண்மை அலுவலர் ஷேக்முகைதீன் தொகுத்து வழங்கினார். பொருளாளர் செண்பககுற்றாலம், நல்லாசிரியர் கணேசமூர்த்தி வாழ்த்தி பேசினர். விழாவில் போக்குவரத்து முதன்மை செயலாளரும், ஆணையருமான தென்காசி ஜவஹர் சங்கத்தை துவக்கி வைத்து பேசுகையில், ‘தென்காசி தனி மாவட்டம் கோரிக்கை நிறைவேறி உள்ளது. இதன் மூலம் அரசு அலுவலர்களும் ஓய்வு பெற்ற அரசு அலுவலர்களும் திருநெல்வேலிக்கு சென்று அதிகாரிகளை சந்திக்க வேண்டிய நிலை மாறியுள்ளது. தென்காசியில் தற்போது புதிதாக உதயமாகி உள்ள தென்காசி மாவட்ட ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்கம் தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியாவிற்கே வழிகாட்டியாக திகழும்.