மாசாணியம்மன் கோயில் மகாமுனி பூஜை

பொள்ளாச்சி,  பிப். 12: ஆனைமலை மாசாணியம்மன் கோயிலில் நேற்று  முன்தினம் இரவில் நடந்த, மகாமுனி பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து  கொண்டனர். ஆனைமலை மாசாணியம்மன் கோயில் குண்டம்  திருவிழா கடந்த  9ம் தேதி நடைபெற்றது.  இதைதொடர்ந்து நேற்று முன்தினம் பகலில் மஞ்சள் நீராடுதலும், இரவில் மகாமுனி  பூஜையும் நடந்தது. மாசாணியம்மன் சன்னிதானம் எதிரே உள்ள மகாமுனி சாமிக்கு  சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, உணவு படையலிட்டு பூஜை நடந்தது.  இதில்  கலந்து கொண்ட பக்தர்களுக்கு, மகாமுனி சாமிக்கு படையிலிடப்பட்ட உணவை,  பிரசாதமாக அருளாளி வழங்கினார். இந்நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியை  சேர்ந்த பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர். இதைதொடர்ந்து நேற்று  மாசாணியம்மனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார பூஜையுடன் குண்டம் திருவிழா  நிறைவுபெற்றது.

Related Stories: