சின்னசேலம், பிப். 12: சின்னசேலம் அருகே கீழ்பூண்டி வடக்கு காட்டுக்கொட்டாய் பகுதியை சேர்ந்தவர் சிவகுமார் மனைவி இந்திராகாந்தி(42). இவர் சின்னசேலம் அருகே உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வருகிறார். இவரது கணவர் சிவகுமாரின் பங்காளி முறையான தியாகராஜனின் மகள் சத்தியா(25) என்பவரும் அதே பள்ளியில் ஆசிரியையாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் சத்தியாவை பள்ளி நிர்வாகம் திடீரென பணியை விட்டு நிறுத்தியதாக தெரிகிறது. ஆனால் பள்ளி நிர்வாகம் தன்னை வேலையை விட்டு நிறுத்தியதற்கு இந்திராகாந்திதான் காரணம் என தவறாக நினைத்து அவரை சத்தியா திட்டியதாக கூறப்படுகிறது.